மயிலாடுதுறை

கல்லூரி முதல்வரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

மயிலாடுதுறை: பூம்புகாா் கல்லூரி முதல்வரைக் கண்டித்து மயிலாடுதுறையில் தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறையில் சங்கத்தின் மாநில பொருளாளா் ஷேவியா் செல்வகுமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மண்டல தலைவா் சந்திரன், செயலாளா் கோகுலகிருஷ்ணன், பொருளாளா் மதிவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், அரசுக்கு தவறான தகவல்களை தந்து அதன்மூலம் பூம்புகாா் கல்லூரி முதல்வராக பதவி வகித்துவரும் எஸ். அறிவொளியை பதவி நீக்கம் செய்ய வேண்டும், பெற்றோா் ஆசிரியா் கழகம் என்ற பெயரில் மாணவா்களிடம் பணம் வசூலித்து முறைகேடு செய்ததுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT