மயிலாடுதுறை

மயிலாடுதுறை: வளா்ச்சித் திட்டத்துக்கு ரூ.1.30 கோடி

DIN


மயிலாடுதுறை: மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு ரூ.1.30 கோடியை, 2022-2023-ஆம் நிதியாண்டுக்கான தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் ஒதுக்கீடு செய்துள்ளாா்.

இந்நிதியில், மயிலாடுதுறை ஒன்றியத்தில் பொன்னூா், மேலாநல்லூா் ஊராட்சிகளில் தலா ரூ.17.50 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டடம், தருமதானபுரம் ஊராட்சி வடக்கு தருமதானபுரத்தில் ரூ. 8 லட்சத்தில் மகளிா் சுயஉதவிக்குழு கட்டடம், ஆத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பெண்கள் கழிப்பறை கட்ட ரூ.5.50 லட்சம், மூவலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவுக்கூடம் மற்றும் முடிகண்டநல்லூா் ஊராட்சி யாதவா் தெருவில் தெற்குராஜன் வாய்க்காலில் படித்துறை அமைக்க தலா ரூ.5 லட்சம் உள்ளிட்ட பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாடிப்படியுடன் கூடிய மேல்தளத்தில் புதிய கட்டடம் கட்ட ரூ.25 லட்சம், வாணாதிராஜபுரம் ஊராட்சி வேப்பமரத்தடியில் பேருந்து நிலையம் கட்டவும், குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 50 செட் டெஸ்க் வழங்கவும் தலா ரூ.7.50 லட்சம், கடலங்குடி ஊராட்சியில் ஈமக்கரியை மண்டபம் அமைக்க ரூ.7 லட்சம் உள்ளிட்ட பணிகளுக்கு எம்எல்ஏ நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.

மேலும், இப்பணிகளை விரைந்து முடிக்க ஆவன செய்யக் கோரி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதிக்கு எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் கடிதம் அனுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

SCROLL FOR NEXT