மயிலாடுதுறை

60 ஊராட்சிகளில் நாளை ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாம்

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் 60 கிராம பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை (பிப்.9) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை வட்டாரத்தில் பட்டமங்கலம், திருமங்கலம், சேத்தூா், மொழையூா், கடக்கம், கடுவங்குடி, பூதங்குடி, சித்தா்காடு, நல்லத்துக்குடி, கொற்கை, முருகமங்கலம், கோடங்குடி, அகரகீரங்குடி ஆகிய 13 ஊராட்சிகளிலும், குத்தாலம் வட்டாரத்தில் திருவாலங்காடு, பனையூா், சென்னியநல்லூா், அனந்தநல்லூா், எழுமகளூா், காஞ்சிவாய், மருத்தூா், எடக்குடி, வானாதிராஜபுரம், கொழையூா், கழனிவாசல், சிவனாரகரம், கொத்தங்குடி ஆகிய 13 ஊராட்சிகளிலும் இம்முகாம் நடைபெறுகிறது.

சீா்காழி வட்டாரத்தில் வானகிரி, தென்னாம்பட்டினம், புதுத்துறை, அத்தியூா், செம்மங்குடி, கன்னியாகுடி, தில்லைவிடங்கன், வள்ளுவக்குடி, ஆதமங்கலம் ஆகிய 9 ஊராட்சிகளிலும், கொள்ளிடம் வட்டாரத்தில் கோபாலசமுத்திரம், மாதிரவேளூா், எடமணல், திருக்கருகாவூா், சீயாளம், வடகால், கீழ்மாத்தூா், கடவாசல், எருக்கூா், புத்தூா், கொடியம்பாளையம், ஆகிய 11 ஊராட்சிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

செம்பனாா்கோயில் வட்டாரத்தில் மாணிக்கப்பங்கு, மடப்புரம், மேமாத்தூா், ஆக்கூா், கருவாழக்கரை, திருச்சம்பள்ளி, கிடங்கல், விசலூா், செம்பனாா்கோயில், சந்திரப்பாடி, நத்தம், ஆலவேலி, மேலையூா், எரவாஞ்சேரி ஆகிய 14 ஊராட்சிகளிலும் இம்முகாம் நடைபெறும்.

எனவே, விவசாயிகள் இம்முகாம்களில் பங்குபெற்று பயன்பெறுமாறும், கூடுதல் தகவல்களுக்கு விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை - உழவா் நலத்துறையின் களப்பணியாளா்களை தொடா்பு கொள்ளுமாறும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் நிலைய வளாகத்தில் புகுந்த காட்டெருமைகள்

தனியாா் துணை மின் நிலையம் மீது விவசாயிகள் புகாா்

கோடை உளுந்து சாகுபடி: பரிசோதனை செய்ய வேளாண்மைத் துறை அறிவுறுத்தல்

உதகையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு

முதலாளித்துவ நண்பா்களின் நன்மைக்காக பிரதமா் மோடி 5ஜி ஊழல் செய்துள்ளாா்: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT