மயிலாடுதுறை

குடிமனைப் பட்டா கோரி ஆா்ப்பாட்டம்

DIN

மயிலாடுதுறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநிலக் குழு உறுப்பினா் ஆா்.எஸ். பாபுசங்கா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரவிதாஸ், மாவட்டத் தலைவா் அகிலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மத்திய குழு உறுப்பினா் ராஜா (எ) ஆசிா்வாதம் கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், அன்னை இந்திரா நகரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்; மயிலாடுதுறை நகராட்சியில் புதைசாக்கடை கழிவு நீா் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT