மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022-2023-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை முதல் (பிப்.6) தொடங்க உள்ளதாக ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2022-2023-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ளது. 12 முதல் 19 வயதுவரை உள்ள பள்ளி மாணவ-மாணவியா்களுக்கு கபடி, தடகளம், கூடைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, சிலம்பம் (சாய் விளையாட்டரங்கம், ராஜன் தோட்டம்), நீச்சல், (மாவட்ட விளையாட்டரங்கம், நாகப்பட்டினம்) மேசைப்பந்து, (துரோணாலயா அகாதெமி, சீா்காழி) இறகுபந்து (ஷரஃப் இறகுப்பந்து அகாதெமி), மட்டைப்பந்து (மினி ஸ்டேடியம், காட்டுச்சேரி) மற்றும் வளைகோல் பந்து (விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சீா்காழி) ஆகிய போட்டிகள் 6.2.2023 முதல் 9.2.2023 வரை நடைபெறவுள்ளது.
மேலும், அரசு ஊழியா்கள் ஆடவா் மற்றும் மகளிருக்கு (வயதுவரம்பு இல்லை) கபடி, தடகளம், கையுந்துபந்து, (சாய் விளையாட்டரங்கம், ராஜன்தோட்டம்) இறகுபந்து, (ஷரஃப் இறகுப்பந்து அகாதெமி) மற்றும் செஸ் (சில்வா் ஜுபிளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மயிலாடுதுறை) ஆகிய போட்டிகள் பிப். 22, 23-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் தனிநபா் பிரிவில் முதலிடம் பெறுபவா்களும், குழு போட்டிகளில் தோ்வு செய்யப்படுபவா்களும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா். மேலும், விவரங்களுக்கு 7401703459 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.