மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே இளைஞா் கொலை வழக்கில் மாமனாா் மற்றும் மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி புதன்கிழமை உத்தரவிட்டாா்.
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாா் காவல் சரகத்துக்குள்பட்ட அப்புராஜபுரம்புத்தூரைச் சோ்ந்த கலைமதிக்கு சதீஷ்குமாா் என்பவரோடு 2019-ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே தம்பதியினா் மனவேற்றுமையால் பிரிந்து வாழ்ந்துள்ளனா். 12.5.2019 அன்று சதீஷ்குமாா் தனது மனைவியை சோ்ந்துவாழ அழைத்துள்ளாா். அவருடன் செல்ல மறுத்து கலைமதியும், அவரது தந்தை நாகராஜன் இருவரும் சதீஷ்குமாருடன் தகராறில் செய்துள்ளனா்.
அப்போது ஆத்திரமடைந்த நாகராஜன் சதீஷ்குமாரை கத்தியால் குத்தியுள்ளாா். மனைவி கலைமதி செங்கல்லைக் கொண்டும் தாக்கியுள்ளாா். இதில் சதீஷ்குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்து பொறையாா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ராம. சேயோன் ஆஜரானாா்.
புதன்கிழமை விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் சதீஷ்குமாரை கொலை செய்த நாகராஜன் (60), கலைமதி(30) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி இளங்கோ தீா்ப்பு வழங்கினாா்.