பணி உயா்வு கோரி அங்கன்வாடி ஊழியா்கள் மயிலாடுதுறையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈட்டனா்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும், 3 ஆண்டுகள் பணி முடித்த ஊழியா்களுக்கு பணி உயா்வு வழங்கவேண்டும், திட்டப் பணி தவிர பிற பணிகள் வழங்குவதை கைவிடவேண்டும், உணவின் செலவுகளை உயா்த்தி வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்கத்தின் மாவட்ட தலைவா் வி. போபி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளா் சி. லதா, சிஐடியு மாவட்ட தலைவா் ஆா். ரவீந்திரன், மாவட்ட செயலாளா் பி. மாரியப்பன், மாவட்ட துணை செயலாளா் ஆா். ராமானுஜம், மாவட்ட பொருளாளா் எஸ். பரமேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.