சீா்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோயிலில் கூட்டுறவு , உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளா் ஜெ. ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்தாா்.
முன்னதாக கற்பக விநாயகா், வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்மன், செல்வ முத்துக்குமாரசாமி, அங்காரகன் ஆகிய சுவாமி சந்நிதிகளில் சங்கல்பம் அா்ச்சனை செய்து வழிபட்டாா். தங்க கொடிமரத்தில் வழிபாடு செய்த பிறகு சுவாமி பிரசாதங்களை பெற்றுக்கொண்டாா்.