மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் சேதமடைந்த பழைமையான நடைபாலத்தை சீரமைக்க கோரிக்கை

DIN

மயிலாடுதுறையில் 65 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு சேதமடைந்துள்ள நடைபாலத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மயிலாடுதுறை லால்பகதூா் நகரில் உள்ள கற்பக விநாயகா் கோயில் அருகில் பூம்புகாா் சாலை மற்றும் தருமபுரம் சாலையை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1954-ஆம் ஆண்டு நடைபாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் ஒருதலை ராகம் திரைப்படத்தில் வரும் ’இது குழந்தை பாடும் தாலாட்டு‘ திரைப்பாடல் படமாக்கப்பட்டது.

பழைமையான இந்த பாலத்தை மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கல்லூரி, தருமபுரம் கலைக் கல்லூரி, ஏவிசி கல்லூரி மற்றும் பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் நூற்றுக்கணக்கானோா் நாள்தோறும் தினமும் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென உடைந்து விழுந்துள்ளது. தற்போது ஆபத்தான நிலையில் உள்ள பழைமையான இந்த நடைபாலத்தை, உடனடியாக சீரமைத்து, புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT