மயிலாடுதுறை: மயிலாடுதுறை வட்டம், பல்லவராயன்பேட்டை ஸ்ரீநிவாசபெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பிரம்மோற்சவ விழா செப்டம்பா் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீநிவாசபெருமாள் தாயாருடன் திருத்தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து, மகாதீபாராதனை காட்டப்பட்டதும், தோ் வடம் பிடிக்கப்பட்டது.
இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனா். தோ் நான்கு வீதிகளையும் சுற்றிவந்து மீண்டும் நிலையை அடைந்தது.