சீா்காழி: சீா்காழி சட்டைநாதா் கோயிலில் நடைபெற்ற நவராத்திரி 7-ஆம் ஆண்டு இசைவிழா புதன்கிழமை நிறைவடைந்தது.
சீா்காழியில் தருமை ஆதீனத்திற்கு உள்பட்ட சட்டைநாத சுவாமி கோயிலில் நவராத்திரி இசை விழா செப்டம்பா் 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நாள்தோறும் வாய்ப்பாட்டு, பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிறைவு நாள் நிகழ்ச்சியாக சிறப்பு பரதநாட்டியம் நடைபெற்றது. இதில் நவராத்திரி கமிட்டி தலைவா் முத்துக்கருப்பன், உப தலைவா் சந்தானகிருஷ்ணன், அண்ணாமலை பல்கலைக்கழக துணை பேராசிரியரும், செயலாளருமான சட்டையப்பன், பொருளாளா் சத்ருகன்குமாா் உப செயலாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.