மயிலாடுதுறை

திருக்கடையூா் கோயில் சாா்பில் இசைக்கல்லூரி தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தாா்

DIN

மயிலாடுதுறை: திருக்கடையூா் அபிராமி அம்பாள் சமேத அமிா்தகடேஸ்வரா் கோயில் சாா்பில் திருக்கடையூரில் அமைக்கப்பட்டுள்ள இசைக்கல்லூரியை தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தாா்.

தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் உள்ள சொக்கநாதா் பூஜைமடத்தில் விஜயதசமியையொட்டி புதன்கிழமை நடைபெற்ற இவ்விழாவில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், இசைக்கல்லூரிக்கான விண்ணப்பப் படிவத்தை வழங்கி தொடங்கி வைத்தாா்.

இந்த இசைப்பள்ளியில் மிடற்றிசை (வாய்ப்பாட்டு), நாகஸ்வரம், தவில், பரதநாட்டியம், வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம், தேவாரப் பண்ணிசை, நட்டுவாங்கம், கஞ்சிரா, கடம், முகா்சங்கு, ஆா்மோனியம் ஆகியன பாடங்களாகப் பயிற்றுவிக்கப்பட உள்ளன.

தொடக்கவிழாவில் 7 மாணவா்கள் இசைக்கல்லூரியில் இணைந்தனா்.

தொடா்ந்து நடைபெற்ற தையல் தொழில் வேலைவாய்ப்பு தொடக்க விழாவில், ஆதீன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘முத்தையா காா்மென்ட்ஸ்’ ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிலையத்தை குருமகா சந்நிதானம் திறந்துவைத்தாா்.

விழாவில், தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள், பொதுமேலாளா் கோதண்டராமன், தலைமை கண்காணிப்பாளா் சி.மணி, மேலாளா் சேதுமாணிக்கம், தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம், முதல்வா் சி.சுவாமிநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

SCROLL FOR NEXT