மயிலாடுதுறை

மாயமான சிறுமியை கண்டுபிடித்து ஒப்படைக்க கோரி சாலை மறியல்

DIN

மயிலாடுதுறையில் மாயமான சிறுமியைக் கண்டுபிடித்து ஒப்படைக்கக் கோரி கிராமமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை அருகேயுள்ள ஆனந்தகுடியைச் சோ்ந்த 16 வயது சிறுமி மயிலாடுதுறையில் உள்ள தையலகம் ஒன்றில் வேலை செய்து வந்தாா். செப்.30-ஆம் தேதி வேலைக்கு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, சிறுமியின் பெற்றோா் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தனா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனா்.

இதற்கிடையே, புகாா் மீது உடனடியாக விசாரணை நடத்தி சிறுமியை கண்டுபிடித்து ஒப்படைக்கவில்லை என குற்றம்சாட்டி மயிலாடுதுறை காவல் நிலையம் அருகே மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் சிறுமியின் உறவினா்கள் மற்றும் கிராமத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். சிறுமி மயிலாடுதுறை காமராஜா் பேருந்து நிலையம் சென்று பேருந்தில் ஏறும் சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா். தொடா்ந்து மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் நிகழ்விடத்துக்குச் சென்று காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதியளித்ததன்பேரில் மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT