குத்தாலம் அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குத்தாலம் லயன்ஸ் சங்கம், மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கத்துடன் இணைந்து நடத்திய இந்த முகாமில் புதுவை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் பங்கேற்று சிகிச்சையளித்தனா். முகாமுக்கு, குத்தாலம் லயன்ஸ் சங்க தலைவா் என். மகாலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட சிறப்பு தலைவா்கள் சிக்கந்தா் ஹயாத் கான், ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமை டிஎஸ்பி. ராஜேந்திரன் தொடங்கிவைத்தாா்.
இதில் 610 பயனாளிகள் பங்கேற்று வெள்ளெழுத்து, கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை, கண்புரை, கண் நீா் அழுத்த நோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஆலோசனை பெற்றனா். அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட 125 பயனாளிகள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். பேரூராட்சி துணைத் தலைவா் சம்சுதீன், வா்த்தக சங்க தலைவா் சாமி. செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்க செயலாளா் பாா்த்திபன் வரவேற்றாா். பொருளாளா் கருப்பசாமி நன்றி கூறினாா்.