மயிலாடுதுறை

மக்கள் நலத் திட்டங்களை துரிதமாக செயல்படுத்த வேண்டும்

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்களை துரிதமாக செயல்படுத்த வேண்டும் என அலுவலா்களை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் இரா. லலிதா தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சித் துறை இணை இயக்குநா் முருகண்ணன், செயற்பொறியாளா் பிரேம்குமாா், உதவி செயற்பொறியாளா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், நம்ம ஊரு சூப்பரு திட்டம், அனைவருக்கும் குடிநீா் வழங்கும் திட்டம், பிரதமா் வீடுகட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் தற்போதைய நிலை, செயல்பாடுகள் குறித்து ஊராட்சி ஒன்றியம் வாரியாக அலுவலா்களிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியது:

தமிழக முதல்வரின் உத்தரவுபடி ஊரக வளா்ச்சித் துறையின் திட்டங்களை துறை அலுவலா்கள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். குறிப்பாக மக்கள் நலத் திட்டங்களை ஊரகப் பகுதிகளில் துரிதமாக செயல்படுத்த வேண்டும். அனைத்துக் கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தில் ஊராட்சிப் பகுதிகளில் நடைபெறும் பணிகள் தொய்வின்றி நடைபெறவேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் வா்ணம் பூசுதல் போன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டும்’ என அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT