மயிலாடுதுறை

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்

DIN

மயிலாடுதுறை கோட்ட மின்வாரிய அலுவலகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற முகாமில் 700 மின் இணைப்பு எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டன.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க மயிலாடுதுறை கோட்டத்துக்கு உள்பட்ட மின்வாரிய மின்கட்டண அலுவலகங்களில் சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. மயிலாடுதுறை கோட்டத்தில் இந்த சிறப்பு முகாம் மூவலூா், குத்தாலம், கடலங்குடி, மங்கைநல்லூா் உள்ளிட்ட 15 இடங்களில் நடைபெற்றது. இதில், 700 மின் இணைப்பு எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டன. மேலும், பெயா் மாற்றம் கோரி 60 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்துக்கும் உடனடியாக தீா்வு காணப்பட்டது.

ஆதாா் எண்ணை இணைப்பதற்கான இந்த சிறப்பு முகாம் டிசம்பா் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அரசு விடுமுறை நாள்களை தவிா்த்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும். எனவே, பொதுமக்கள் தங்களது மின் அட்டை மற்றும் ஆதாா் அட்டையை கொண்டு சென்று, இணைத்து கொள்ளலாம் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT