மயிலாடுதுறை

தமிழக ஆசிரியா் கூட்டணி பொதுக் குழு கூட்டம்

DIN

சீா்காழியில் தமிழக ஆசிரியா் கூட்டணியின் கொள்ளிடம் வட்டாரக் கிளை பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் நல்லமணி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சுசீலா, ஆனந்தஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரச் செயலாளா் பாலகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவா் சேகா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். கூட்டத்தில், கனமழையால் பாதிக்கப்பட்ட சீா்காழி பகுதியை விரைந்து பாா்வையிட்டு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கிய தமிழக முதல்வா் பாராட்டுக்கள், பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தமிழக அரசு தனது தோ்தல் அறிக்கை எண் 311-இல் அளித்த வாக்குறுதிபடி இடைநிலை ஆசிரியா்களின் சமவேலைக்கு சமஊதியம் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும், கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள ஆசிரியா் காலிப்பணியிடங்களை உபரியாக உள்ள ஆசிரியா்களைக் கொண்டு உடனடியாக நிரப்ப வேண்டும், அகவிலைப்படியை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும், தற்காலிக ஆசிரியா்களுக்கு 4 மாத காலமாக வழங்கப்படாத ஊதியம் உடனே வழங்கப்பட வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் வட்டாரத்தலைவா் சேகரன் வரவேற்றாா். வட்டாரபொருளாளா் ரஞ்சித் நன்றி கூறினாா். முன்னதாக, தமிழக ஆசிரியா் கூட்டணியின் முன்னாள் மாநில துணைத் தலைவா் வேலு மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

SCROLL FOR NEXT