மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் மே 27-இல் நடைபெறவுள்ளது என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மே 27-ம் தேதி காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.
இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண்மை, நீா்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத் துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடா்பான கருத்துத்துகளை மட்டும் தெரிவிக்கலாம். கூட்டத்தில் பங்கேற்போா் அரசின் கரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.