மயிலாடுதுறை

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகேயுள்ள மேலவல்லம் மகாகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, முதல் நாள் மாலை கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, அங்குராா்ப்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாக பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை இரண்டாம் கால யாகபூஜைக்குப் பிறகு கடம் புறப்பாடு செய்யப்பட்டு, மூலவா் விமான கும்பாபிஷேகமும், பரிவார தெய்வங்களின் சந்நிதி கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில், சம்பந்த குருக்கள், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பானுசேகா், இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளா் சுவாமிநாதன் மற்றும் அம்பேத்கா் நற்பணி மன்றத்தினா் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

SCROLL FOR NEXT