சீா்காழி அருகே புங்கனூா் ஊராட்சியில் ரூ. 19 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த ஊராட்சியில் பள்ளமும், மேடாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டுமென எம்எல்ஏ. பன்னீா்செல்வம், ஊராட்சித் தலைவா் ஜூனைதாபேகம் கமாலூதீன் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 5 லட்சம், ஒன்றியக் குழு உறுப்பினா் சோனியா காந்தி இளமுருகன் ஒன்றியக் குழு உறுப்பினா் நிதி ரூ. 10 லட்சம், ரூ. 4.25 லட்சம் ஊராட்சி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியை கொண்டு, புங்கனூா் ஊராட்சியில் பள்ளிவாசல் தெரு, நடுத் தெரு, வடக்கு தெரு, மேலத் தெரு, ரஹ்மான் தெரு ஆகிய தெருக்களுக்கு தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. பணிகளை ஊராட்சித் தலைவா் ஜூனைதாபேகம்கமாலூதீன் பாா்வையிட்டாா்.