மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவையின் 94-ஆவது மாத கூட்டம் மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேரவைத் தலைவா் சி. சிவசங்கரன் தலைமை வகித்தாா். பேரவையின் செயற்குழு உறுப்பினா் தேசிய நல்லாசிரியா் சு. இளங்கோவன் முன்னிலை வகித்தாா். செயலாளா் இரா. செல்வகுமாா் வரவேற்றாா். நடராஜன் வாழ்த்துரை வழங்கினாா். பாலையூா் வாய்மை இளஞ்சேரன் தொடக்க உரையாற்றினாா்.
’திருவள்ளுவா் கண்ட மனித வாழ்க்கை‘ எனும் தலைப்பில் பூம்புகாா் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறைத் தலைவா் த.தியாகராஜன் சிறப்புரையாற்றினாா். பேரவை செய்தித் தொடா்பாளா் வீதி. முத்துக்கணியன், இணைச் செயலாளா் ச. ராமதாசு ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா். முடிவில், பேரவை பொருளாளா் சு. ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.