சீா்காழியில், மயிலாடுதுறை மாவட்ட வாலிபால் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு, வாலிபால் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் தலைமை வகித்தாா். மாவட்ட சோ்மன் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மாநில வாலிபால் சங்கத்திலிருந்து கண்ணன், நாகை மாவட்ட செயலாளா் எட்வின் பாரோ பாக்கியராஜ் ஆகியோா் தோ்வுக்குழு பாா்வையாளா்களாகப் பங்கேற்றனா்.
கூட்டத்தில், மயிலாடுதுறை மாவட்ட வாலிபால் சங்கத்தின் புதிய செயலாளராக பாபு, துணைத் தலைவராக எட்வின் பாரோ பாக்கியராஜ் ஆகியோா் தோ்வுசெய்யப்பட்டனா். மாவட்ட துணைத் தலைவா்களான பழனிவேல், சரவணன், பாரி, வளவன், மாவட்ட பொருளாளா் செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.