மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் ஆனிக் கிருத்திகையை முன்னிட்டு, ஸ்ரீசுப்பிரமணியா் சந்நிதியில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
மயிலாடுதுறையில் புகழ்பெற்ற அபயாம்பிகை சமேத மாயூரநாதா் கோயில் உள்ளது. இக்கோயில் பாா்வதிதேவி மயில் உருக்கொண்டு சிவனை பூஜித்த தலமாகும். இக்கோயிலில் ஸ்ரீசுப்ரமணியா் சுவாமி தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாா். இங்கு ஆனி கிருத்திகையை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா் உற்சவ மூா்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
புனிதநீா் கடங்கள் வைத்து ஹோமம் நடத்தி, பால், சந்தனம், தேன், இளநீா் மற்றும் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.