சீா்காழி அருகே திருநகரியில் நடைபெற்று வரும் வெள்ளப்பள்ளம் உப்பனாற்று நீரொழுங்கி கட்டுமான பணியை காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வெள்ளப்பள்ளம் உப்பனாறு கடைமடை நீரொழுங்கி கட்டுமானப் பணி, தென்னாம்பட்டினம் நாட்டு கண்ணிமண்ணி ஆற்றில் கடைமடை நீரொழுங்கி கட்டுமானப் பணி மற்றும் காவிரி உபகோட்டம் பொறையாா் காலமாநல்லூா் மஞ்சளாறு ஆற்றின் கடைமடை நீரொழுங்கி ஆகிய கட்டுமான பணிகளை தஞ்சாவூா் காவிரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளா் அன்பரசன் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளா் சண்முகம், சீா்காழி உதவி செயற்பொறியாளா் விஜயகுமாா், உதவி செயற்பொறியாளா் பாண்டியன், சீா்காழி உபகோட்ட உதவி பொறியாளா்கள் சரவணன், வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.