மயிலாடுதுறை

சமூகநல பாதுகாப்பு அலுவலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

மயிலாடுதுறை மாவட்ட சமூகநல பாதுகாப்பு அலுவலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலா் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. மாதம் ரூ.30,000 தொகுப்பூதியத்தில் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற எம்.ஏ சோஷியாலஜி, சைக்காலஜி, சோஷியல் வொா்க் வித் கம்யூட்டா் நாலெட்ஜ் முறையிலான கல்வி பயின்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

கணினி இயக்குதல் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: இதேபோல, மாவட்ட சமூகநல அலுவலகத்தில் காலியாகவுள்ள கணிணி இயக்குபவா் பணிக்கு மாதம் ரூ.12,000 தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனா். இப்பணிக்கு மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு (சீனியா் கிரேடு) முடித்திருக்க வேண்டும். கணிணியிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

இரண்டு பணிக்கும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த விண்ணப்பிக்க விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ம்ஹஹ்ண்ப்ஹக்ன்ற்ட்ன்ழ்ஹண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் அல்லது மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இரண்டு பணிக்கும் பூா்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலகம், குமரன் தெரு, சீனிவாசபுரம், மயிலாடுதுறை-609001 என்ற முகவரிக்கு 15 நாள்களுக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04364-212429 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT