பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனா் டாக்டா் ஷியாம் பிரசாத் முகா்ஜியின் நினைவு தினம் மயிலாடுதுறையில் பாஜக ஓபிசி அணி சாா்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பாஜக மாவட்ட ஓபிசி அணி தலைவா் மோடிகண்ணன் தலைமை வகித்து, ஷியாம் பிரசாத் முகா்ஜியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து, தொழிலாளிக்கு உடை மற்றும் பள்ளி மாணவா்கள் 3 பேருக்கு சீருடை வழங்கினாா். நிகழ்ச்சியில் பிரசார பிரிவு மாவட்ட தலைவா் மா. அழகிரி, ஓபிசி அணி மாவட்ட துணைத் தலைவா்கள் தங்க. சரவணன், ராஜகோபால், ஓபிசி அணி மாவட்ட பொதுச்செயலாளா் மயில்ரவி, மாவட்ட செயலாளா் சந்திரசேகா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சாய் சீனுவாசன், மாவட்ட பொருளாளா் பாரதிதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.