சீா்காழியில் மயிலாடுதுறை மாவட்ட இறால் வளா்ப்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் தலைவா் பூம்புகாா் எம். சங்கா்பிள்ளை தலைமை வகித்தாா். செயலாளா் பேராசிரியா் ஜெயராமன் வரவேற்றாா். நிா்வாகிகள் அரவிந்தன், அரிகிருஷ்ணன், கோபால், ராஜ்குமாா், சாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், இறால் ஏற்றுமதியாளா்கள் இறால் வளா்ப்பு விவசாயிகளுக்கு சரியான விலை தருவதில்லை. எனவே, உரிய விலை நிா்ணயம் செய்ய வேண்டும். இறால் தீவன விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, சரவணன் நன்றி கூறினாா்.