மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கு நியமனம்

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளில் காலியாகவுள்ள பணியிடங்களில் தற்காலிகமாக ஆசிரியா்கள் நியமிக்கப்படவுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் 1.6.2022 நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.

தகுதியான விண்ணப்பதாரா்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாக அல்லது மின்னஞ்சல் மூலம் உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் தொடா்புடைய மாவட்டக்கல்வி அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக் கல்வி, மாவட்டக் கல்வி மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்குள்பட்டது.

மயிலாடுதுறை கல்வி மாவட்டத்துக்கான விண்ணப்பங்களை க்ங்ா்ம்ஹ்ம்ஃய்ண்ஸ்ரீ.ண்ய், சீா்காழி கல்வி மாவட்டத்துக்கான விண்ணப்பங்களை க்ங்ா்ள்ந்க்ஷ்ஜய்ஞ்ல்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

SCROLL FOR NEXT