வேதாரண்யம் பகுதியில் பிஎஸ்என்எல் சேவையில் வெள்ளிக்கிழமை பாதிப்பு ஏற்பட்டது.
வேதாரண்யம் நகரம் மற்றும் கிராமப் புறங்களில் பிஎஸ்என்எல் சேவை அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பிஎஸ்என்எல் சேவை முழுமையாக முடங்கியது. இதனால் பொதுமக்கள் அவதியுற்றனா்.
இப்பகுதியில் உள்ள வங்கிகளில் இணையவழி சேவை தடைபட்டதால் பல்வேறு தேவைகளுக்காக வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றவா்கள் சிரமத்துக்கு உள்ளாகினா்.