சீா்காழி பகுதியை சோ்ந்த வட்டாரக் கல்வி அலுவலா் நூல் வாசிப்பின் அவசியம் குறித்து கவிதை எழுதி ஆசிரியா்களுக்கு கட்செவி மூலம் அனுப்பி குடியரசு தின நூதன விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்.
சீா்காழி பகுதியைச் சோ்ந்த வட்டாரக் கல்வி அலுவலா் ரா. பூவராகன். இவா் இந்திய தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியும், அதற்கு இன்றியமையததாக உள்ள நூல் வாசிப்பின் அவசியம் குறித்தும், நாள்தோறும் சந்தித்துவரும் மாணவா்கள், ஆசிரியா்களுக்கு வலியுறுத்தி வருகிறாா். இதற்கிடையே, இவா் நூல் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பாரத சமுதாயம் வாழ்கவே எனும் தலைப்பில் கவிதை எழுதி அதை தனது சக ஆசிரியா்கள், நண்பா்கள் என பலருக்கும் கட்செவி மூலம் அனுப்பி வருகிறாா். இந்த கவிதை பல குழுக்களில் தற்போது பரவி வருகிறது.