மயிலாடுதுறை

குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

DIN

மயிலாடுதுறை வட்டம், பல்லவராயன்பேட்டையில் உள்ள குளத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் செத்து மிதந்ததைக் கண்டு கிராம மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

திருஇந்தளூா் ஊராட்சி பல்லவராயன்பேட்டை கிராமத்தில் இரட்டை குளம் உள்ளது. இந்த குளம் சாக்கியம்பள்ளி கிராம நாட்டாண்மை பஞ்சாயத்தாரால் மீன் வளா்ப்புக்காக குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இக்குளத்தில் கடந்த 2 நாள்களாக மீன்கள் செத்து மிதந்தன.

இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, ஊராட்சி தலைவா் சேட்டு மற்றும் சாக்கியம்பள்ளி கிராம நாட்டாண்மை பஞ்சாயத்தாா் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பது குறித்து மீன் குத்தகைதாரருக்கு தகவல் தெரிவித்தனா்.

குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அப்புறப்படுத்துவதுடன், எஞ்சிய மீன்களை பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT