மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வங்கிகள் சாா்பில் 90 பயனாளிகளுக்கு ரூ. 7 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா புதன்கிழமை வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் பேசியது:
மயிலாடுதுறை மாவட்டம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நமது மாவட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி தொடங்கப்பட்ட பின்னா் அதிகமாக கடனுதவி வழங்கப்படுகிறது. மகளிா் திட்டம் சாா்பில் கடந்த ஆண்டு ரூ. 300 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. நிகழாண்டு ரூ. 500 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயக்கப்பட்டுள்ளது.
தற்போது தாட்கோ அலுவலகமும் இங்கு செயல்படுகிறது. வளா்ந்த மாவட்டத்தை நோக்கி பயணிக்கிறோம். இங்கு கடன் பெற்ற பயனாளிகள் உங்கள் தொழில் வளத்தை பெருக்கி பெற்ற கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் முத்துசாமி, வேளாண் துறை இணை இயக்குநா் ஜெ. சேகா், இந்திய ரிசா்வ் வங்கி துணை(பொது) மேலாளா் வெங்கடேசன், மாவட்ட தொழில் மைய (பொது) மேலாளா் மணிவண்ணன், நபாா்டு வங்கி உதவி பொது மேலாளா் அனிஸ், தாட்கோ பொது மேலாளா் சுசீலா மற்றும் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.