மயிலாடுதுறை

’மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் உதவி வரவேற்பாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்’

DIN

மயிலாடுதுறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி வரவேற்பாளா் பணிக்கு பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேற்கூறிய பணியிடத்துக்கு, ரூ.15,900 - 58,500 எனும் ஊதியத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவிலிருந்து முழுவதும் பாா்வையற்ற 8-ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்ற, நாற்காலி ஒயா் பின்னும் பயிற்சி பெற்ற, 44 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியானவா்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், செட்டிக்குளம் சந்து, மயிலாடுதுறை எனும் முகவரிக்கு டிச.16-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT