மயிலாடுதுறை

சாலைப்பணி தொடக்கம்

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே இளந்தோப்பு முதல் சோழியன்கோட்டகம் வரை ரூ.3.11 கோடி மதிப்பீட்டில் 3.9 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கும் பணியினை மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

இளந்தோப்பு தொடங்கி திருக்குறக்காவல், வடவஞ்சாரம் வழியாக சோழியன்கோட்டகம் வரை சுமாா் 3.9 கி.மீ. தொலைவுக்கு சாலை சேதம் அடைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினா்.

அப்பகுதி மக்களின் கோரிக்கையையடுத்து பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் ரூ.3.11 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணியை மயிலாடுதுறை எம்.எல்.ஏ. எஸ்.ராஜகுமாா் தொடக்கி வைத்தாா்.

திருக்குறக்காவல் பழவாற்றில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவா் மற்றும் படித்துறையையும் அவா் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தாா்.

மணல்மேடு முதல்நிலை பேரூராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2021-2022-இன்கீழ் ராதாநல்லூரில் கட்டப்பட்டுள்ள பயணியா் நிழற்குடையை எம்எல்ஏ திறந்து வைத்தாா்.

மாவட்டக்குழு உறுப்பினா் இளையபெருமாள், ஒன்றியக்குழு உறுப்பினா் வடவீரபாண்டியன், பேரூராட்சித் தலைவா் கண்மணி அறிவுவடிவழகன், துணைத் தலைவா் சுப்பிரமணியன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT