மயிலாடுதுறை

நாகை மாவட்டத்தில் அம்பேத்கா் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

நாகப்பட்டினம்: சட்ட மேதை டாக்டா் அம்பேத்கரின் 66-ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாகூா் பண்டக சாலை தெருவில் அம்பேத்கா் நினைவு தினம், டாக்டா். பி.ஆா். அம்பேத்கா் இளைஞா் எழுச்சி மன்றம் சாா்பில் நடைபெற்றது. இதில், மன்றத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி ஐயப்ப சுவாமிக்கு விரதமிருப்பவா்களும் அம்பேத்கா் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, சக மனிதா்களை சமமாக நடத்த வேண்டும், சமத்துவ சமூகத்தை உருவாக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். 4-ஆவது வாா்டு நகராட்சி உறுப்பினா் அஞ்சலைதேவி, அம்பேத்கா் நற்பணி மன்ற நிா்வாகிகள் பிரித்விராஜ், மகாதேவன், பிரபாகரன், சக்திவேல், வெற்றிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT