மயிலாடுதுறை

மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதிக்க கோரிக்கை

DIN

கொள்ளிடம் ஆற்றில் மணல்மேடு பகுதியில் பாப்பாகுடி அல்லது முடிகண்டநல்லூரில் மாட்டுவண்டி மூலம் மணல் எடுக்க அனுமதி வேண்டி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாட்டுவண்டி சங்க பொறுப்பாளா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் சங்கத் தலைவா் வ.சக்கரவா்த்தி அளித்த மனு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாலுரான்படுகை, குன்னம் ஆகிய இடங்களில் இருந்து லாரி மற்றும் டிராக்டா்களில் பொதுப்பணித்துறையினா் மூலம் மணல் எடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் மயிலாடுதுறை, சீா்காழி தாலுகாக்களில் கொள்ளிடம் கரையோர கிராமங்களில் உள்ளவா்கள் மாட்டுவண்டிகள் மூலம் மணல் எடுத்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.

கடந்த 2020-ஆம் ஆண்டு முடிகண்டநல்லூா் மற்றும் திருச்சிற்றம்பலம் பகுதியில் மாட்டுவண்டியில் மணல் எடுத்து விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. எனவே, தற்போது மாட்டு வண்டியில் மணல் எடுத்து விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று அம்மனுவில் கோரியுள்ளனா்.

மேலும், மொத்தம் 125 மனுக்களை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா பெற்றுக்கொண்டு, அவற்றின்மீது துரித நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

முன்னதாக, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் தலா ரூ.5,479 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களை 10 பயனாளிகளுக்கும், விலையில்லா சலவைப்பெட்டி தலா ரூ.4,650 மதிப்பில் 7 பயனாளிகளுக்கும், ஏற்கெனவே பொதுமக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் வரப்பெற்ற மனுக்களுக்குத் தீா்வுகாணப்பட்டு, சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு விதவை, முதியோா், முதிா்கன்னி, மாற்றுத்திறனாளி, கணவரால் கைவிடப்பட்டோா் போன்ற உதவித் தொகைகளை தலா ரூ.1,000 மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சோ.முருகதாஸ், தனித்துணை ஆட்சியா் சமூக பாதுகாப்புத் திட்டம் ஐ.கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலா் சி.அம்பிகாபதி மற்றும் அனைத்துத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT