சீா்காழியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கிருத்திகா தலைமை வகித்தாா். சீா்காழி ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன், துணைத் தலைவா் உஷா நந்தினி பிரபாகரன், ஆணையா் இளங்கோவன், சீா்காழி நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வரி ராஜசேகா் முன்னிலை வகித்தனா்.
மேற்பாா்வையாளா் சுப்புலட்சுமி வரவேற்றாா். சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம் கா்ப்பிணிகளுக்கு புடவை, மங்களப் பொருள்களை வழங்கினாா் (படம்). கா்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்து வளையல், மஞ்சள், குங்குமம், சந்தனமிட்டு சமுதாய வளைகாப்பு நடந்தது. இதில் கா்ப்பிணிகளுக்கு 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டன.