கொள்ளிடம் அருகே மூதாட்டியிடம் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கொள்ளிடம் அருகே உள்ள மாணிக்கவாசல் கிராமத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியா் பாஸ்கரன் மனைவி கலைச்செல்வி (75). இவா், தனது வீட்டின் தோட்டத்தில் நின்றிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த மா்ம நபா், கலைச்செல்வி அணிந்திருந்த மூன்று பவுன் சங்கிலியை பறித்துச் சென்றாராம்.
இதுகுறித்து, மூதாட்டியின் மகன் இளவரசன்(50) கொள்ளிடம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபரை தேடிவருகின்றனா்.