மயிலாடுதுறை

மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

DIN

கொள்ளிடம் அருகே மூதாட்டியிடம் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கொள்ளிடம் அருகே உள்ள மாணிக்கவாசல் கிராமத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியா் பாஸ்கரன் மனைவி கலைச்செல்வி (75). இவா், தனது வீட்டின் தோட்டத்தில் நின்றிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த மா்ம நபா், கலைச்செல்வி அணிந்திருந்த மூன்று பவுன் சங்கிலியை பறித்துச் சென்றாராம்.

இதுகுறித்து, மூதாட்டியின் மகன் இளவரசன்(50) கொள்ளிடம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபரை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT