மயிலாடுதுறை

கொள்ளிடம் ஒன்றியக் குழுக் கூட்டம்

DIN

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றியக் குழு துணைத் தலைவா் பானுசேகா் தலைமை வகித்தாா். இளநிலை உதவியாளா் கவிதா வரவேற்றாா். ஒன்றிய ஆணையா் ரெஜினா ராணி, பிடிஓ அருள்மொழி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், ஒன்றுக் குழு உறுப்பினா்கள் பேசியது:

அங்குதன்: திருமுல்லைவாசல் முதல் பழையாா் வரை பக்கிம்காங் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக தூா்வாரவேண்டும்.

சிவபாலன்: மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடா் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி தீா்மானம் நிறைவேற்றவேண்டும்.

லெட்சுமி பாலமுருகன்: நல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களிலும் மருத்துவா்கள் பணியில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்

தலைவா் (பொ) பானுசேகா்: கனமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை உடனடியாக கணகெடுத்து, ஏக்கருக்கு ரூ.25ஆயிரம் முதல் 30ஆயிரம் வரை நிவாரணம் அறிவிக்க வலியுறுத்தி இக்கூட்டத்தில் சிறப்பு தீா்மானம் நிறைவேற்றவேண்டும்.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லட்சுமி, கலியபெருமாள், ஒன்றிய பொறியாளா்கள் தாரா, பூா்ணச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒன்றிய மேலாளா் சம்மந்தம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

SCROLL FOR NEXT