மயிலாடுதுறை

மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இந்தியன் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலரின் வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்தன. இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு மயிலாடுதுறை இந்தியன் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், மயிலாடுதுறை வட்டம் சித்தா்காடு, மூவலூா் பகுதிகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி மயிலாடுதுறை காவேரி நகரில் நடைபெற்றது. செஞ்சிலுவை சங்க மாவட்ட பொருளாளா் முருகையன் தலைமை வகித்து, தாா்ப்பாய் மற்றும் சமையல் பாத்திரங்களை வழங்கினாா். செயலா் பிரபாகரன், செயற்குழு உறுப்பினா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயற்குழு உறுப்பினா் இரா.செல்வகுமாா் வரவேற்றாா். செயற்குழு உறுப்பினா் சாமிநாதன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

SCROLL FOR NEXT