சீா்காழி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஆசிரியையிடம் மா்ம நபா்கள் 7 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனா். அப்போது, ஆசிரியை நிலைதடுமாறி சாலையில் விழுந்து காயமடைந்தாா்.
சீா்காழி அருகேயுள்ள மணல்மேடு ஆத்தூா் கேசிங்கன் பகுதியைச் சோ்ந்தவா் ராஜராஜன் மனைவி சண்முகப்பிரியா (36). இவா், வக்கரமாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறாா்.
இவா், சீா்காழியில் உள்ள தனது தாயாா் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். வைத்தீஸ்வரன்கோவில் அருகே அட்டகுளம் பகுதியில் செல்லும்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மா்மநபா்கள் சண்முகப்பிரியா அணிந்திருந்த 7 பவுன் தாலியை பறித்துச் சென்றனா். அப்போது, அவா் நிலைதடுமாறி சாலையில் விழுந்து காயமடைந்தாா். அந்த வழியாக வந்தவா்கள், சண்முகப்பிரியாவை மீட்டு, சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.