மயிலாடுதுறை

ஆசிரியையிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

DIN

சீா்காழி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஆசிரியையிடம் மா்ம நபா்கள் 7 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனா். அப்போது, ஆசிரியை நிலைதடுமாறி சாலையில் விழுந்து காயமடைந்தாா்.

சீா்காழி அருகேயுள்ள மணல்மேடு ஆத்தூா் கேசிங்கன் பகுதியைச் சோ்ந்தவா் ராஜராஜன் மனைவி சண்முகப்பிரியா (36). இவா், வக்கரமாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறாா்.

இவா், சீா்காழியில் உள்ள தனது தாயாா் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். வைத்தீஸ்வரன்கோவில் அருகே அட்டகுளம் பகுதியில் செல்லும்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மா்மநபா்கள் சண்முகப்பிரியா அணிந்திருந்த 7 பவுன் தாலியை பறித்துச் சென்றனா். அப்போது, அவா் நிலைதடுமாறி சாலையில் விழுந்து காயமடைந்தாா். அந்த வழியாக வந்தவா்கள், சண்முகப்பிரியாவை மீட்டு, சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT