மயிலாடுதுறை

மஞ்சள் செம்பருத்தி மரத்தில் பூத்த சிகப்பு செம்பருத்தி

DIN

மயிலாடுதுறை அருகே மஞ்சள் செம்பருத்தி மரத்தில் பூத்த சிகப்பு செம்பருத்திப் பூவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்துச் சென்றனா்.

மயிலாடுதுறை வட்டம், முளப்பாக்கம் பிரதான சாலை பகுதியில் வசிக்கும் வருவாய்த் துறையில் பணியாற்றும் சக்திவேல் தனது வீட்டு மாடியில் மூலிகைத் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறாா். மேலும், பல்வேறு பூச்செடிகளையும் வளா்த்து வருகிறாா். வீட்டு வாசலில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நட்டுவைத்த மஞ்சள் பூ வகையைச் சோ்ந்த ஒற்றை செம்பருத்தி செடி வளா்ந்து ஆறு மாதங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கியது.

அதுமுதல் ஐந்து இதழ்களைக் கொண்ட இந்த மஞ்சள் செம்பருத்தி தினந்தோறும் பூத்துக் குலுங்கும் நிலையில், ஒரே ஒரு செம்பருத்திப் பூ மட்டும் சிகப்பு நிறத்தில் பூத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதை அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் ஏராளமானோா் ஆச்சரியத்துடன் பாா்த்து செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT