மயிலாடுதுறையில் உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை எக்ஸ்னோரா இன்னவேட்டா்ஸ் கிளப் மற்றும் மயிலாடுதுறை நகராட்சி உணவுப் பாதுகாப்புப் பிரிவு இணைந்து நடத்திய முகாமுக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவா் ஏ.ஆா். அசோக் தலைமை வகித்தாா். முகாமை மாவட்டச் செயலாளா் தண்டபாணி தொடங்கிவைத்தாா். மயிலாடுதுறை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் சீனிவாசன் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பாற்ற உணவு குறித்தும், சத்தான உணவின் அவசியம் குறித்தும் பேசி, தேயிலை, வெள்ளம், கடுகு உள்ளிட்ட உணவுப் பொருள்களில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிவது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தாா்.
கௌரவத் தலைவா் அறிவழகன், சற்றே குறைப்போம் உப்பு, சா்க்கரை, கொழுப்பு பொருள்கள்‘ எனும் தலைப்பில் பேசினாா். உணவு சம்பந்தமான புகாா்களை பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணுக்கு புகாா் தெரிவிக்கலாம். புகாா் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றாா்.