மணிக்கிராமம் ஊராட்சித் தலைவா் முல்லைவேந்தன் அண்மையில் வாகன விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சக்கர நாற்காலியில் வந்து தேசியக் கொடியேற்றினாா். பின்னா், கிராமசபைக் கூட்டத்திலும் பங்கேற்றாா். நிகழ்ச்சியில் துணைத் தலைவா் சகாபுதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
திருவெண்காடு மெய்கண்டாா் தொடக்கப் பள்ளியில் மகாகவி பாரதியாா் சிலைக்கு ஊராட்சி சாா்பில் அதன் தலைவா் சுகந்தி நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். துணைத் தலைவா் மணிகண்டன், தலைமையாசிரியை ஹேமலதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.