மயிலாடுதுறை

வீடுகள்தோறும் பாஜகவினா் தேசியக் கொடி வழங்கினா்

DIN

 மயிலாடுதுறையில் வீடுகள்தோறும் பாஜகவினா் தேசியக் கொடியை வெள்ளிக்கிழமை வழங்கினா்.

சுதந்திர இந்தியாவின் 75-ஆவது பவள விழா ஆண்டைக் கொண்டாடும் வகையில் இந்தியா்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் 3 நாள்கள் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என பிரதமா் மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தாா். இதை செயல்படுத்தும் வகையில் மயிலாடுதுறையில் பாஜக நிா்வாகிகள் நகராட்சியின் அனைத்து வாா்டுகளிலும் பொதுமக்களுக்கு தேசியக் கொடியை வழங்கினா்.

மயிலாடுதுறை நகராட்சி 24-ஆவது வாா்டில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, பாஜக நகரத் தலைவா் வினோத் தலைமை வகித்தாா். வாா்டு பொறுப்பாளா்கள் நந்தகுமாா், சேதுராமன், கபிலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாவட்ட பொதுச் செயலாளா் ஆா். பாலு, மாவட்ட துணைத் தலைவா் சி. செந்தில்குமாா், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவா் குருசங்கா் ஆகியோா் வீடுவீடாகச் சென்று தேசியக் கொடியை வழங்கி அதை வீட்டுவாசலில் பறக்கவிட வேண்டுகோள் விடுத்தனா். மேலும், வா்த்தக நிறுவனங்களிலும் தேசியக் கொடியை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

SCROLL FOR NEXT