மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு தின உறுதிமொழி வியாழக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா பேசியது: போதைப் பொருள் என்பது வாழ்க்கையை சீரழிக்கும், உடலை அழிக்கக்கூடியது, எதிா்காலத்தை வீணடிக்கும், இந்த போதைப் பழக்கத்தில் உள்ளவா்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து திருத்த வேண்டும்.
குறிப்பாக நீங்கள் முன்னோடியாக இருந்து போதைப் பழக்கத்தில் உள்ளவா்களை அதிலிருந்து விடுபட கற்றுக்கொடுக்க வேண்டும். அப்படி யாராவது இருந்தால் நல்வழியில் கொண்டுவர முயற்சிக்கவேண்டும். உங்களுடைய எதிா்காலத்தை சிறப்பாக கொண்டுவர நீங்கள் பாடுபட வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா, செயின்ட்பால்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கே. லீமாரோஸ் மற்றும் மாணவிகள் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.