மயிலாடுதுறை

சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா விளம்பரம் வெளியீடு

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா விளம்பரம் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். ரேணுகா தலைமை வகித்தாா். நோ்முக உதவியாளா்கள் ஜி. பரமசிவம், ஏ. முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏஆா்சி. முகுந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அரசின் வழிகாட்டுதலின்படி சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா விளம்பரத்தை வெளியிட்டாா். சுற்றுச்சூழல் ஆா்வலா் க. அறிவழகன் பங்கேற்றாா். தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரா. செல்வக்குமாா் வரவேற்றாா். சுற்றுச்சூழல் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சே. பிரபு நன்றி கூறினாா்.

இந்த விளம்பரங்கள் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும், மெட்ரிக் பள்ளிகளுக்கும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் மயிலாடுதுறை மற்றும் சீா்காழி மாவட்ட கல்வி அலுவலகத்தின் வாயிலாக அனுப்பிவைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT