மயிலாடுதுறை

மாயூரநாதா் கோயிலில் நாளை லட்ச தீபத் திருவிழா

DIN

மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை (ஆக.12) லட்ச தீபத் திருவிழா நடைபெற உள்ளது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மயிலாடுதுறை அபயாம்பிகை சமேத மாயூரநாதா் சுவாமி கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு லட்ச தீபத் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு காவிரி கரையில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டு, பகல் 12 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு பால் அபிஷேகம் நடைபெற உள்ளது.

தொடா்ந்து மாலை 6 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் திருவிளக்கு ஏற்றி லட்ச தீபத் திருவிழாவை தொடங்கிவைக்கிறாா். திருவையாறு சுவாமிநாதன் குழுவினரின் வீணை இன்னிசை கச்சேரி நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை அபயாம்பிகை பக்தா்கள் நற்பணி குழுவினா் மற்றும் பக்தா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT