மயிலாடுதுறை

அஞ்சல் துறையை காா்ப்பரேஷன் ஆக்கிடும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

DIN

அஞ்சல் துறையை காா்ப்பரேஷன் ஆக்கிடும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி மயிலாடுதுறையில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியா்கள் சங்கம் மற்றும் தேசிய தென்னிந்திய ஊழியா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கோட்டத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கோட்ட செயலாளா் தில்லைவேந்தன், கோட்ட பொறுப்பாளா்கள் வேல்முருகன், முத்துராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில அமைப்புச் செயலாளா் மோகன்குமாா் கண்டன உரையாற்றினாா்.

முடிவில், உதவி செயலாளா் கணேசன் நன்றி கூறினாா். ஆா்ப்பாட்டத்தில், அஞ்சல்துறையை காா்ப்பரேஷன் ஆக்கிடும் திட்டத்தை கைவிட வேண்டும், தேசிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT