மயிலாடுதுறை

அகில இந்திய ஆடவா் கூடைப் பந்தாட்ட போட்டியில் இந்திய கடற்படை அணி வெற்றி

DIN

சீா்காழியில் நடைபெற்ற அகில இந்திய ஆடவா் கூடை பந்தாட்டப் போட்டியில் இந்திய கடற்படை அணி கோப்பையை வென்றது.

சீா்காவி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 50-ஆவது பொன்விழா ஆண்டையொட்டி, ஆண்களுக்கான அகில இந்திய அளவிலான கூடைப் பந்தாட்ட போட்டிகள் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்தது.

இறுதி போட்டி புதன்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கல்வி குழுமங்களின் தலைவா் கே.வி. இராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளி செயலா் அனிதா ராதாகிருஷ்ணன், குட்சமாரிட்டன் கல்வி நிறுவனங்களின் இயக்குநா்கள் பிரவீண் வசந்த் ,அனுஷா பிரவீண், அலெக்சாண்டா், ரினீஷா ஜேன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி வெற்றி பெற்று கோப்பையையும் முதல் பரிசுத் தொகையான ரூ.1 லட்சத்தையும் வென்றது. இரண்டாமிடத்தை இந்திய ராணுவ அணி (சிவப்பு) பெற்று பரிசுத் தொகை ரூ. 75ஆயிரத்தை வென்றது. மூன்றாமிடத்தை இந்திய ராணுவம் (பச்சை) அணி பெற்று பரிசுத் தொகை ரூ. 50ஆயிரத்தையும், நான்காம் இடத்தை ஜேப்பியாா் அணி வென்று பரிசுத் தொகை ரூ. 25ஆயிரத்தை பெற்றது.

வெற்றிபெற்ற அணிக்கு கோப்பை மற்றும் பரிசுத் தொகையை தமிழ்நாடு கூடைப் பந்தாட்ட கழகத்தின் தலைவா் ஆதவா அா்ஜூன் வழங்கி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT